tamilnadu

img

மே மாத மத்தியில் உயிரிழப்பு 38,220 ஆக அதிகரிக்கும்

புதுதில்லி, ஏப்.24- இந்தியாவில் கொரோன பரவலின் வீரியம் மே மாதத் தில் பயங்கரமாக இருக்கும் என தகவல்கள் தெரி விக்கின்றன. 38,220 உயிரிழப்புகள் நிகழும். 5.35 லட்சம் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர் என ஆய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன. ஆய்வை ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட் வான்ஸ்ட் சயின்டிஃபிக் ரிசர்ச் (ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்-பெங்களூர், ஐ.ஐ.டி-பம்பாய் மற்றும் ஆயுதப்படை மருத்துவக் கல்லூரி-புனே ஆகியவை மேற்கொண்டுள்ளன. ஆய்வை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோ சகர் (பி.எஸ்.ஏ) கே.விஜயராகவன் மேற்பார்வையிட்டுள் ளார்.

மிக மோசமான சூழ்நிலையில் தற்போதைய இறப்பு எண்ணிக்கை 652 -இ லிருந்து 38,220 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் கொரோனா தொற் றுள்ளவர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 லட்சத்தைத் தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, மருத்துவமனை களில் 76,000-க்கும் மேற்பட்ட ஐ.சி.யூ படுக்கைகள் தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியை அடிப்படையாகக் கொண்டே இத்தாலி மற்றும் நியூயார்க் மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்ட தாகவும் நோய்த்தொற்றுகள், இறப்புகளின் கணிப்புகள் கணிக்கப்பட்ட அளவிற்கு நெருக்கமாக பொருந்தின என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், மே 19-ஆம் தேதிக்குள் சுமார் 38,000 பேர் உயிரிழப்பர். உண்மையான தரவு வருவதால் இது மாறக்கூடும். சுகாதார கட்டமைப்பு களை மேம்படுத்த வேண்டுமென்பதை எச்சரிக்கவே இந்த ஆய்வு என ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர் இணை பேராசிரியர் சந்தோஷ் அன்சுமாலி செய்தியாளர்களிடம் கூறினார்.

நான்கு வார இறப்பு விகிதம்:- ஏப்ரல் 28 வரை- 1,012 பேர். மே 5-ஆம் தேதி வரை 3,258 பேர். மே 12-ஆம் தேதி வரை 10,924 பேர். மே 19-ஆம் தேதி 38,220 பேர்.

மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், பிபிஇக்கள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், முகமூடிகள் போன்ற வற்றை மாவட்ட அளவில் தயாராக வைத்திருக்கவேண்டி யன் தேவையை இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்துகிறது.

இறப்பு விகிதம் குறித்து அன்சுமாலி கூறுகையில், மே 3- ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையை இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்டது. இரண்டாம் கட்ட ஊரடங்கில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஊர டங்கு நீட்டிக்கப்பட்டால் தொற்று பரவல் விகிதம் குறை வாக இருக்கும் என்றார்.